தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி - கரூரில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

கரூர்: நவரத்தின கற்கள், கைவினைப் பொருட்கள் கண்காட்சியை  போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்வையிட்டு திறந்து வைத்தார்.

transport-minister-open-stones-exhibition
transport-minister-open-stones-exhibition

By

Published : Jan 4, 2020, 6:44 PM IST

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2020ஆம் ஆண்டுக்கான கைவினைப் பொருட்கள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிலையில் இந்த கண்காட்சியினை ரிப்பன் வெட்டி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த பலவகை கற்களாலான படிகமாலை, பச்சைநிற கற்கள், சிவப்புநிற கற்கள், மோதிரங்கள், வளையல்கள், கற்களாலான சுவாமி சிலைகள், கற்களாலான கட்சி சின்னங்கள் என பல வகையான கற்களாலான கைவினைப் பொருட்கள் இடம் பெற்றிருந்ததை பார்வையிட்டார்.

கைவினைப் பொருட்கள் கண்காட்சி

இந்நிகழ்ச்சியில் நவரத்தின கற்கள் வியாபாரிகள் சங்க தலைவர் குணசேகரன், ஜாஹிர் உசேன் செயலாளர் சங்கத்தை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்காட்சியை கண்டுகளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் - இளைஞர் பெருமன்றத்தினர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details