தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனாவை வைத்து அரசியல் செய்யும் மோடியும், எடப்பாடியும் தேச துரோகிகள்' - traffic ramasamy criticises modi

கரூர்: மத்தியில் ஆளும் மோடியும் தமிழ்நாட்டை ஆளும் எடப்பாடி பழனிசாமியும் கரோனா வைரஸை வைத்து அரசியல் செய்கின்றனர் எனவும் இருவரும் தேச துரோகிகள் என்றும் டிராபிக் ராமசாமி விமர்சித்துள்ளார்.

traffic ramasamy criticises modi and edappadi palaniswami
traffic ramasamy criticises modi and edappadi palaniswami

By

Published : Oct 12, 2020, 5:50 PM IST

கரூரில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. பகலவனிடம் டிராபிக் ராமசாமி மனு அளிக்க வந்தார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ஏற்கனவே மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற பெயரில் சமூக மக்கள் பிரச்னைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுவருகிறது. இந்நிலையில் புதிதாக நல்லாட்சி இயக்கம் என்ற அமைப்பு கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நல்லாட்சி இயக்கத்தின் சார்பில் மக்கள் நலனில் அக்கறை உள்ள மனிதர்களைத் தேர்ந்தெடுத்து போட்டியிட வைப்போம். நாட்டு மக்கள் தேர்தலின்போது நான் உள்பட நல்லவராக இருந்தால் வாக்களியுங்கள், இல்லையென்றால் நோட்டாவிற்கு வாக்களியுங்கள். 33 விழுக்காடு வாக்குகள் நோட்டாவிற்கு பதிவானால் அந்தத் தேர்தல் ரத்து செய்யப்படும். இது சட்டத்தில் இடம் பெற்றுள்ளது" என்றார்.

டிராபிக் ராமசாமி

"மத்தியில் ஆளும் மோடியும் தமிழ்நாட்டை ஆளும் எடப்பாடி பழனிசாமியும் கரோனா வைரஸை வைத்து அரசியல் செய்கின்றனர். இதன் மூலம் தனியார் மருத்துவமனையில் அரசியல்வாதிகளும் கொள்ளையடித்து வருகின்றனர்" எனக் குற்றஞ்சாட்டினார்.

கரோனா வைரஸ் என்பது ஒன்றும் கிடையாது. இதை வைத்து அரசியல் செய்யும் மோடியும் எடப்பாடி பழனிசாமியின் தேச துரோகிகள் எனக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க... 'ஏன் பிறந்தாய் மகனே எனும் கேள்வி கேட்கும் நிலையில் பிரதமர்' - டிராபிக் ராமசாமி!

ABOUT THE AUTHOR

...view details