தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 23, 2021, 3:48 PM IST

Updated : May 23, 2021, 8:32 PM IST

ETV Bharat / state

கரூரில் இன்று புதிதாக 239 பேருக்கு கரோனா!

கரூரில் இன்று புதிதாக 239 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரூரில் கரோனா நிலவரம்
கரூரில் கரோனா நிலவரம்

கரூரில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதன்படி கரூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி (மே.23) புதிதாக 102 பெண்கள், 137 ஆண்கள் என மொத்தம் 239 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட அனைவரும் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 336 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும் மாவட்டத்தில் கரோனா தொற்றில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டவர்கள், காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சையில் இருப்போர் என மொத்தம் 2275 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறனர்.

மாவட்டத்தில் இன்று (மே.23) வரை மொத்தம் 13,539 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,316 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 141 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க:டெல்லியிலிருந்து 2,160 கிலோ எடை கொண்ட மருத்துவ உபகரணங்கள் சென்னை வருகை!

Last Updated : May 23, 2021, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details