கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில், மதிமுக மாணவரணி மாநில செயலாளர் பால சசிகுமார் - திவ்யா திருமணத்தினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆகியோர் தலைமையேற்று நடத்தி வைத்தனர்.
திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வைகோ, "தரம் தாழ்ந்து பேசுவதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை மிஞ்ச முடியாது. இன்று ஒரு பேச்சு பேசுபவர், நாளை அதை மறுத்து பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை அழித்துவிடலாம் என்று நினைத்து பேச ஆரம்பித்தவர், இந்தியால் தமிழை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டு, தற்போது மூக்கறுபட்டு போய் விட்டார்.