கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மணவாசி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (மே. 8) வழக்கம் போல் இரவு 9 மணி அளவில் மது விற்பனைப் பணத்தை எடுத்துக் கொண்டு, மதுக்கடை ஊழியர்கள் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டுச் சென்றனர்.
நேற்று (மே. 9) காலை 8 மணியளவில் ஊழியர்கள் வந்து கடையை திறந்து பார்த்த போது, டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரைத் துளையிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் மதுபாட்டில்களைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.