தமிழ்நாடு

tamil nadu

செந்தில் பாலாஜி வீடு திரும்ப சிறப்பு பிரார்த்தனை!

By

Published : Aug 19, 2020, 9:07 PM IST

கரூர்: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டுமென நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

சிறப்பு பிரார்த்தனை
சிறப்பு பிரார்த்தனை

கரூர் மாவட்ட திமுக கழக செயலாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து, மீண்டும் மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென பாதிரிப்பட்டி மாரியம்மன் கோவில் மற்றும் சிவன் கோவிலிலும் குளித்தலை சட்ட மன்ற உறுப்பினர் ராமர் ஏற்பாட்டின் பேரில், திமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் இணைந்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்கள்.

இதையும் படிங்க:பிரபல பாடகர் எஸ்.பி.பி கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

ABOUT THE AUTHOR

...view details