தமிழ்நாடு

tamil nadu

உறவினர்களுக்கு இடையே தகராறு: குழந்தைகளுக்கு அரிவாள் வெட்டு

By

Published : May 22, 2020, 11:47 AM IST

கரூர்: உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின்போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sickle-cuts-to-children-in-a-dispute-between-relatives
sickle-cuts-to-children-in-a-dispute-between-relatives

கரூர் வ.உ.சி தெருவில் வசித்துவரும் வெங்கடேசன்(33) என்பவருக்கும், அவரது உறவினர் மாயாண்டி(25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக, மதுபோதையில் இருந்த மாயண்டி, வெங்கடேசனிடம் நேற்று (மே 21) தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சண்டையில் அரிவாளால் வெங்கடேசனை வெட்ட முயற்சித்துள்ளார் மாயாண்டி. அப்போது வெங்கடேசன் தப்பிவிட, எதிர்பாராதவிதமாக அருகிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலா(13), தவசிகா( 11) ஆகிய இரு சிறுமிகள் தாக்கப்பட்டனர்..

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் இரு சிறுமிகளையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக கரூர் மாவட்ட டவுன் பகுதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இதையும் படிங்க:மதுப்பாட்டில்களை பறித்த காவலர்கள் - புகாரளித்த மதுப் பிரியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details