தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் நுகர்வு குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தி குறைப்பு - பாமக அறிக்கைக்கு செந்தில் பாலாஜி பதில்

மின் நுகர்வு குறைந்துள்ளதால் தனியார் மற்றும் மின்வாரிய உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி பாமகவின் அறிக்கைக்கு பதில் அளித்துள்ளார்.

By

Published : May 18, 2022, 6:10 PM IST

மின் நுகர்வு குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தி குறைப்பு - பாமக அறிக்கைக்கு செந்தில் பாலாஜி பதில்
மின் நுகர்வு குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தி குறைப்பு - பாமக அறிக்கைக்கு செந்தில் பாலாஜி பதில்

கரூர்:தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (மே18) கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் நூறு ஆண்டுகள் சாதனை என போற்றும் அளவுக்கு சிறப்பாக மக்கள் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன்படி காவிரியாற்றில் 2 ஆயிரம் கோடி அளவிற்கு புதிய கதவணை தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது வேளாண் கல்லூரி கரூர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டு நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகளும் தொடங்கியுள்ளது. அதேபோல அரவக்குறிச்சியில் கலை அறிவியல் கல்லூரி, தரகம்பட்டியில் கலை அறிவியல் கல்லூரி என இரண்டு புதிய கட்டிடம் கட்டும் பணி கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒருசேர வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் வழங்கியுள்ளார்.

2,000 மெகாவாட் மின் உற்பத்தி குறைப்பு: இன்னும் பல திட்டங்கள் அடுத்த நான்காண்டுகளில் நிறைவேற்றப்படவுள்ளன. தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் அதிக மக்கள் திட்டங்களை நிறைவேற்றிய மாவட்டமாக உருவாக்குவதற்கான திட்டங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும்.

மின் நுகர்வு குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தி குறைப்பு - பாமக அறிக்கைக்கு செந்தில் பாலாஜி பதில்

மேலும், கரூர் மாநகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான டி.பி.ஆர் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்தில் ஒப்பந்த முறையில் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேநேரம் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிதி தயார் நிலையில் உள்ளது.

நிலக்கரி கையிருப்பை பொறுத்தவரையில், அடுத்த ஏழு நாள்களுக்கு கையிருப்பு உள்ளது. நேற்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காற்றாலைகளில் தயாரிக்கப்படும் மின்சாரம் வீணாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மழைக்காலங்களில் மின் தொகுப்புகளை சமமாக வைக்கவில்லை என்றால், பழுதாகும் சூழ்நிலை ஏற்படும். இதனால் தற்போது உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 2,000 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

பாமக கட்சித் தலைவருக்கு தெரியும்: 60 சதவீத மின் உற்பத்தி கட்டாயம் செய்தாக வேண்டும். காற்றாலைகளில் கிடைக்கும் மின் உற்பத்தியில் பழுது ஏற்பட்டால் அதனை சமமாக வைத்துக்கொள்ள வேண்டும். இது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவருக்கும் தெரியும்.

அவருக்கு தெரிவிக்க விரும்புவதெல்லாம், இரண்டு மணி நேரம் மின் நுகர்வு குறைந்த காரணத்தினால் காற்றாலை உற்பத்தியில் இருந்து தேவையான அளவு மட்டுமே மின் நுகர்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மின் நுகர்வு குறைந்துள்ள காரணத்தினால் சோலார், காற்றாலை, அனல் மின் நிலையம் மூலம் தனியார் மற்றும் அரசு மூலம் மேற்கொள்ளப்படும் உற்பத்தி அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கி வருகிறது. மற்ற மாநிலங்கள் கேட்டு விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், அங்கும் மின்சாரம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராக உள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால் குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கும் அளவுக்கு அறிவிக்கப்பட்ட மின்வெட்டு உள்ளது. தமிழகத்தில் எவ்வித மின் வெட்டு இல்லை. மின்வெட்டு அறிவிப்பும் இல்லை.

மத்திய தொகுப்பில் இருந்து 800 மெகாவாட் பற்றாக்குறையாக வழங்கப்பட்ட சூழ்நிலையில் ஏற்பட்ட மின் தடங்கல்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சொந்த உற்பத்தி மூலம் ஈடு செய்யப்பட்டது. இனி நிலக்கரி பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அடுத்த ஏழு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது.

2.0 இலக்கு திட்டம்: டெண்டர் முறையில் தமிழ்நாடு முதலமைச்சர் 137 டாலர் விலைக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் நிலக்கரி டன் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்ததன் விளைவாக, தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான நிலக்கரி விலை உயர்வு நேரத்தில் முன்னதாகவே முதலமைச்சரின் முன் முயற்சியால் நிலக்கரியை கொள்முதல் செய்துள்ளோம்.

டெண்டர் முறையில் விலை உயர்ந்த பிறகு அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்கப்பட்டுள்ளது என எழுப்பப்படும் தேவையற்ற விமர்சனங்களை முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்போது உற்பத்தி செய்யப்படும் 25 சதவீத மின் உற்பத்தியானது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இந்த உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக 2.0 எனும் இலக்கு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 24,000 மின்மாற்றிகள் ஒரே ஆண்டில் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த அரசை குறை சொல்வதற்கும், இதனை அரசியல் ஆக்குவதற்கும் நான் இதை கூறவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் மின் பழுது மட்டுமே மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது.

ஆனால், தற்பொழுது முழுமையாக தமிழகம் முழுவதும் மின்சார வாரியத்தின் மூலம் கணக்கெடுக்கப்பட்டு கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் இலவச மின்சார இணைப்பு கேட்டு காத்திருந்த விவசாயிகளில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஒர் ஆண்டில் தமிழ்நாடு அரசு புதிய மின் இணைப்புகளை வழங்கியுள்ளது” எனக் கூறினார்.

இதையும் படிங்க:Perarivalan release: ’மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்..!’ - விஜயகாந்த்

ABOUT THE AUTHOR

...view details