தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பள்ளி மாணவர்கள் - karur school students function

கரூர்: நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் பல்வேறு நலன்கள் பெறவும் பள்ளி மாணவ-மாணவிகள், தங்களின் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர்.

தாய் தந்தைக்கு பாத பூஜை
school children worshiped father and mother

By

Published : Feb 17, 2020, 8:23 AM IST

கரூரில் மதுரை - சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பரணிபார்க் கல்விக் குழுமத்தின் சார்பாக பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தனியார் பள்ளியிலிருந்து 10, 11, 12ஆம் வகுப்புகளைச் சேர்நத் 500க்கும் மேற்பட்டோர் மாணவ, மாணவிகள் வரவிருக்கும் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் பல்வேறு நலன்கள் பெறவும் தங்களது பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர். .

இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஆசி வழங்கியதோடு வரவிருக்கும் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பள்ளி மாணவர்கள் தாய் தந்தைக்கு பாத பூஜை செய்து வழிபாடு

இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பாதபூஜை செய்த காட்சி அனைவரிடத்திலும் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பெற்றோர்கள், மாணவ - மாணவியர் கருத்துகளை ஒருவர் மற்றவருடன் பகிர்ந்து தவறுகளை திருத்திக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர், முதல்வர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதையும் படிங்க:டீக்கடையில் பாரம்பரிய விளையாட்டு ஓவியங்கள் - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details