கரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் கைகழுவும் கிருமி நாசினி, முகக் கவசம் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதனைச் சார்ந்த தொழில்கள் பிழைத்துக்கொண்டன. மக்கள் அனைவரும் கிருமி நாசினி, முகக் கவசங்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினர்.
அதனைப் பயன்படுத்திக்கொண்ட வியாபாரிகள், அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தனர். அப்படி ரூ.49 மதிப்புள்ள கிருமி நாசினி ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசு கிருமி நாசினி, முகக் கவசங்களை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்து.
அதன்படி, 200 மிலி கிருமி நாசினியின் அதிகபட்ச விலை ரூ.100ஆகவும், இரண்டு அடுக்கு முகக் கவசத்தின் விலை ரூ.8 ஆகவும், 3 அடுக்கு முகக் கவசத்தின் விலை ரூ.10ஆகவும் நிர்ணயித்தது. அதன்பின் நாளடைவில் பல்வேறு மாற்றங்கள் நிகழந்துவிட்டன. ஏனென்றால் கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் அத்தியாவசியப் பொருள்கள் ஆகிவிட்டன எனலாம்.
தற்போது அவற்றைப் பயன்படுத்தாதவர்களே கிடையாது எனும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி அத்தியாவசியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கிருமி நாசினிகள், முகக் கவசங்களின் விலை பல தரப்பட்ட மக்களிடையே எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
ஒரு பக்கம் கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதித்த தினக்கூலிகள், கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் வாங்க மிகவும் சிரமத்திற்கு ஆளாவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். மறுப்பக்கம் கிருமி நாசினிகள், முகக் கவசங்களை அன்றாட செலவுகளில் சேர்ந்துகொண்டு பயன்படுத்துகின்றனர்.
ஒரு சிலர் விழிப்புணர்வு இல்லாமல் முகக் கவசம், கிருமி நாசினிகளை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். சிலர் எதற்கு செலவு வீட்டிலிருக்கும் சோப்பை பயன்படுத்தானால் போதும் என்கின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்கும்பொழுது, முகக் கவசம் பத்து ரூபாய் அல்லது 20 ரூபாய்க்கு எளிமையாக கிடைக்கிறது.