கரூர்: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், அந்த சமூகத்தின் மாநில தலைவர் அம்பலத்தரசு தலைமையில் இன்று (ஏப்ரல் 2) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் குப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரையர் சங்கத்தின் மாநில தலைவர் அம்பலத்தரசு, "1996 ஆம் ஆண்டு முத்தரையர் சமூகத்தின் 29 உட்பிரிவுகளை முத்தரையர் என்று ஒரே பெயரில் அழைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், அந்த அரசாணையை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. ஆகவே, அந்த அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
வன்னியர் சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுபோல முத்தரையர் சமூகத்திற்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்னியர் சமூகம் தனி சாதியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டிருந்தனர். ஆனால், முத்தரையர் சமூகம் பல்வேறு பிரிவுகளாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவுகளில் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். அவற்றை ஒரே தொகுப்பாக இணைத்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.