தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர்மழை எதிரொலி : நிரம்பி வழியும் குளம், குட்டைகள்.! - தொடர்மழை எதிரொலி : நிரம்பி வழியும் குளம், குட்டைகள்

கரூர் : தொடர்மழை காரணமாக கரூர் அடுத்த மைலம்பட்டி குளம் நிரம்பியுள்ளது. கிராமப்புற சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளில் மழைநீர் வெள்ளமென வழிந்தோடியது.

Ponds and streams overflow due to heavy rainfall
தொடர்மழையால் நிரம்பி வழியும் குளம், குட்டைகள்

By

Published : Dec 3, 2019, 7:16 AM IST

கரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடரும் கன மழையால் ஆங்காங்கே, சின்னஞ்சிறு குட்டை, குளங்கள் நிரம்பியுள்ளதோடு, கடவூர் வட்டம், மைலம்பட்டி பகுதியில் உள்ள குளங்களும், சிறு ஒடைகளும் நிரம்பி வழிகிறது.

கரூரில் இருந்து புலியூர் வழியாக தரகம்பட்டி செல்லும் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பாய்ந்தோடுகிறது. மேலும், ஆங்காங்கே, சாலைகளில் ஓடும் மழைநீரில் கார்கள் மற்றும் பேருந்துகள் ,இருசக்கர வாகனங்கள் சாலைகளில் செல்பவர்களின் மீது தண்ணீரை வாரி இறைத்து செல்கின்றன.

தொடர்மழையால் நிரம்பி வழியும் குளம், குட்டைகள்

மேலும், இந்த மழையால் கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அனால் இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details