தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மண்டேலா’ திரைப்படத்தை தடை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு! - கரூர் அண்மைச் செய்திகள்

கரூர் : ”மண்டேலா” திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம், முடி திருத்துவோர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

கரூரில் ’மண்டேலா’ திரைப்படத்தை தடை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு!
கரூரில் ’மண்டேலா’ திரைப்படத்தை தடை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு!

By

Published : Apr 16, 2021, 9:42 PM IST

காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ள ”மண்டேலா” திரைப்படத்தில் முடிதிருத்துவோரை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இதனையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் சக்கரவர்த்தி ராமச்சந்திரன், இயக்குனர் அஸ்வின் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, திரைப்படத்துக்கு தடை விதிக்க முடி திருத்துவோர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான புகார் மனுவை முடி திருத்துவோர் சங்கத் தலைவர் சீனிவாசன், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்தார்.

இதன் காரணமாக கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் முடி திருத்தும் கடைகளுக்கு இன்று (ஏப்.16) ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது.

இதையும் படிங்க : கரோனா பரவல்: ரயில்வே ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details