தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2019, 11:03 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டின் உரிமை பறிபோக திமுகவே காரணம் - ஓபிஎஸ்

கரூர்: தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் பறிபோனதற்கு திமுகதான் காரணம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

ops

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாறையூர் பள்ளப்பட்டி, ஈசநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர்,

திமுக ஆட்சியில் மின்தட்டுப்பாட்டை தீர்க்க முடியாமல் திணறினார்கள். ஆனால் தற்போது அதிமுக ஆடசியில் பிற மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளான காவிரி பிரச்னை, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு பிரச்னை போன்ற பல்வேறு உரிமைகள் பறிபோக காரணமான இருந்தவர்கள் திமுக கட்சிதான்.

பரப்புரை செய்த துணை முதலமைச்சர்

திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஸ்டாலின் மற்றும் தினகரன் இருவரும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். எனவே வாக்காளர்களாகிய மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details