தமிழ்நாடு வேளாண் துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி இத்திட்டத்தை நேற்று(மே.23) காணொலி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் தொடக்கி வைத்தார். கரூர் பஞ்சமாதேவி கிராமத்தில் மின்னாம் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தில் 157 ஊராட்சிகளில், 75 ஊராட்சிகளில் இத்திட்டம் முதல் கட்டமாக இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
கரூர் மாவட்டத்திற்கு மட்டும் சுமார் 7.8 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1859 ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் ஏக்கர் விவசாய பாசனம் மேற்கொள்ளவும், இத்திட்டத்தில் சுமார் 70 லட்சம் விவசாயிகள் பயன் பெற கூடிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று(மே.23) தொடக்கி வைத்தார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய இத்திட்டம் இந்தியாவுக்கு வழிகாட்டக்கூடிய திட்டமாக அமையும்’ என்று தெரிவித்தார்.
மேலும் பெட்ரோல், டீசல் வரி ஒன்றிய அரசுக்கு வைத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர், ’பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் இரண்டு வரிகள் விதிக்கப்படுகின்றன.