கரூர்:வேலை தேடுபவர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பினர் இணைந்து நகர்ப்புற வாழ்வாதார மையத்தின் மூலம் தமிழ்நாட்டில் முதல் முறையாக 'பாலம்' அமைப்பின் தொடக்க விழா மார்ச் 8ஆம் தேதியான இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
வேலை வாய்ப்பளிக்கும் 'பாலம்'
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பாலம் அமைப்பினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அதில், 'தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் முதல்முறையாகத் தொடங்கப்பட்டுள்ள பாலம் அமைப்புத்திட்டத்தின் மூலம், வேலைதேடும் இளைஞர்களுக்கு அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் வைக்கப்படும் பாலம் அமைப்பின் விண்ணப்பப் பெட்டியில் விண்ணப்பங்களை அளித்து, அதன்மூலம் வேலைவாய்ப்பைப் பெறலாம்.