தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விரலில் வைத்த மை காயவில்லை' - அலுவலருக்கு அட்வைஸ் செய்த அமைச்சர் - விரலில் மை

கரூர்: வாக்கு செலுத்துவதற்கு முன்பு விரலில் வைக்கப்பட்ட மை விரைந்து காயாததால், மை முழுவதும் வாக்குச்சீட்டில் ஒட்டிக்கொண்டதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அலுவலர்களிடம் புகார் தெரிவித்து முறையாக மை வைக்க அலுவலர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

minister-mr-vijayabhaskar
minister-mr-vijayabhaskar

By

Published : Dec 27, 2019, 2:58 PM IST

கரூர் மாவட்டத்தில் தாந்தோணி, க. பரமத்தி, அரவக்குறிச்சி, கரூர் ஆகிய ஒன்றியங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகின்றது.

கரூர் - கோவை சாலை அருகில் கிழக்கு ஆண்டான்கோவில் பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

முன்னதாக வாக்களிப்பதற்கு அடையாளமாக அவரது விரலில் மை வைக்கப்பட்டது. அந்த மை வெகுநேரமாகியும் காயாமல் இருந்து, அவை முழுவதும் வாக்குச்சீட்டில் ஓட்டிக் கொண்டதாக அங்கிருந்த அலுவலரிடம் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மேலும் மை வைப்பது குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை கூறியதோடு, தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அன்பழகனை கைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இதனை அறிவுறுத்தவும் கூறினார்.

இதையும் படிங்க...

'அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம்' - ஓபிஎஸ் பெருமிதம்

ABOUT THE AUTHOR

...view details