தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம். ஆர். விஜயபாஸ்கர் (மார்ச். 21) ஆண்டான்கோயில் மேல்பாகம் ஊராட்சி, அமிர்தாம்பாள் நகர், மருத்துவர் நகர், திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "மு.க. ஸ்டாலின் கேஸ் விலை, டீசல் விலை உயர்ந்ததாக போராட்டம் நடத்தினார். ஆனால் முதலமைச்சர் தற்பொழுது உங்களுக்கு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழ்நாட்டை அதிமுக உருவாக்கியது - தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழ்நாட்டை அதிமுக உருவாக்கியது
கரூர்: நீர் மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தி தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக உருவாக்கியது அதிமுக அரசு என அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரையின்போது பேசினார்.
![தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழ்நாட்டை அதிமுக உருவாக்கியது எம். ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11105871-522-11105871-1616395350811.jpg)
எம். ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை
எம். ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை
அதிமுக அரசு நீர் மேலாண்மை திட்டத்தை முறையாக பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக உருவாக்கியுள்ளது. உணவு உற்பத்தியில் முதல் இடமாக உள்ள தமிழ்நாடு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசின் விருதை பெற்றுவருகிறது. எனவே நீங்கள் சிந்தித்து மீண்டும் அதிமுக அரசு அமைவதற்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.