தமிழ்நாடு

tamil nadu

காதலன் தற்கொலை: துக்கத்தில் உயிரை மாய்த்த காதலி!

By

Published : Jun 4, 2021, 7:45 PM IST

கரூர்: காதலன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மனமுடைந்த காதலியும் தற்கொலை செய்துகொண்டார்.

lovers-attempted-suicide-in-karur
lovers-attempted-suicide-in-karur

கரூர்: தாந்தோன்றிமலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்தன். இவரது மகன் ஆசிக் (19) தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த 31ஆம் தேதி சிறுமிக்கும், ஆஷிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆஷிக்குடன் பேச சிறுமி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஆஷிக் அன்று இரவு தற்கொலை செய்து கொண்டார். இதனால் விரக்தி அடைந்த சிறுமி, இரண்டு நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுமியும் நேற்று (ஜூன்.3) தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை தீர்வல்ல

இதுகுறித்து கரூர் தாந்தோன்றிமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கடலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details