தமிழ்நாடு

tamil nadu

கரூர் சட்டப்பேரவை தொகுதியில் பயனாளிகளுக்கு கடனுதவி

By

Published : Oct 10, 2020, 1:26 PM IST

கரூர்: சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பயனாளிகளுக்கு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடனுதவிகளை வழங்கினார்.

சட்டமன்ற தொகுதியில் பயனாளிகளுக்கு கடனுதவி
சட்டமன்ற தொகுதியில் பயனாளிகளுக்கு கடனுதவி

கரூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

கரூர் தொகுதிக்குட்பட்ட வடிவேல் நகர், வாங்கல் குப்பிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 136 பயனாளிகளுக்கு, சுமார் 80 லட்சம் ரூபாய் அளவிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

சட்டமன்ற தொகுதியில் பயனாளிகளுக்கு கடனுதவி

மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: உதவும் தாமரை திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு பாஜக 25 லட்சம் கடனுதவி

ABOUT THE AUTHOR

...view details