தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் வாலிபருக்கு கத்திக்குத்து! - கத்திக்குத்து

கரூர்: தொழில் போட்டி காரணமாக அடையாளம் தெரியாத நபர்களால் வாலிபருக்கு கத்திக்குத்து நடந்தது குறித்து வெங்கமேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கத்திக்குத்து ஏற்பட்டுள்ள விக்கேஷ்

By

Published : Jun 12, 2019, 6:49 PM IST

கரூர் மாவட்டம் வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். 42 வயதான இவர், லாரி கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இதன்மூலம் கரூர், கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பகுதியிலுள்ள கார் வாங்கி விற்கும் தொழில் செய்பவர்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் போட்டியின் காரணமாக திருப்பூரைச் சேர்ந்த சின்னசாமியுடன் ஏற்கனவே இவருக்கு பிரச்னையும் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு சின்னச்சாமி அவரது நண்பர்கள் நான்கு பேர்களுடன் வெண்ணைமலை பூர்ணிமா கார்டனிலுள்ள விக்னேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு தொழில் சம்பந்தமாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது வாய்த்தகராறு முற்றி கைகலப்பு உருவாகியுள்ளது.

பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஷ் உடலில் பல இடங்களில் குத்திக் கொலை செய்ய முயற்சி செய்தனர். மேலும் பொம்மை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். பொம்மை துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதனால் சின்னசாமியும் அவரது நண்பர்களும் காரில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details