கரூர் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகில் அன்னை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கோயிலின் 97ஆம் ஆண்டு திருவிழா கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து அமராவதி ஆற்றில் புனித நீராடி ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஜவஹர் பஜார் வழியாக ஊர்வலமாக மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள கோயில் வரை வந்தனர். கோயிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடனைச் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.