கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசு ஞாயிறு பொதுமுடக்கம், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், கரூர் நகராட்சிக்குள்பட்ட மதுபான கடையில் நேற்று (ஏப்ரல் 24) மதுப்பிரியர்கள் மதுபானங்கள் வாங்க கூடினர். அப்போது முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.