தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மறந்த கரூர்வாசிகள் - ஞாயிறு பொதுமுடக்கம்

கரூர்: ஞாயிறு பொதுமுடக்கத்தையடுத்து மக்கள் இறைச்சிக் கடைகளிலும் மதுபான கடைகளிலும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் ஒன்று கூடியது, கரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் அச்சம் உருவாகியுள்ளது.

karur
karur

By

Published : Apr 25, 2021, 9:59 AM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசு ஞாயிறு பொதுமுடக்கம், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், கரூர் நகராட்சிக்குள்பட்ட மதுபான கடையில் நேற்று (ஏப்ரல் 24) மதுப்பிரியர்கள் மதுபானங்கள் வாங்க கூடினர். அப்போது முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

அதேபோல் கரூர் நகர்ப் பகுதியில் உள்ள வெங்கமேடு, தாந்தோணிமலை, காந்திகிராமம், வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மீன், இறைச்சிக் கடைகளிலும் பொதுமக்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details