தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 8, 2020, 5:14 PM IST

ETV Bharat / state

ஆபத்தை உணராமல் செல்பி மோகம்: நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

கரூர்: அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை பொதுமக்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.

Selfies in Amaravati river
Karur

கரூர் மாவடத்தில் பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை பொதுமக்கள் சுற்றுலா தளம் போல பார்வையிட்டு வருகின்றனர்.

இளைஞர்களும் பெண்களும் பாலத்தின் ஓரத்தில் உள்ள குடிநீர் குழாய்களுக்கு மேலே ஏறி ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மாயனூர் பகுதியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதேபோல கடந்த ஆண்டு காவேரி பாலத்தில் கைக்குழந்தையோடு செல்பி எடுக்க முயன்ற போது குழந்தை தவறி நீரில் மூழ்கி உயிரிழந்தது.

இந்நிலையில், அமராவதி ஆற்றுப் பாலத்தின் மேலே செல்பி எடுக்கும் பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details