கரூர் அருகே உள்ள வீரராக்கியம், பால்ராஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கணேஷ் நகரில் வசிக்கும் 300க்கும் அதிகமான குடியிருப்புகளின் குடிநீர் வசதிக்காக அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எட்டு செண்ட் ஒதுக்கப்பட்டடு, நேற்று (அக்.21) பணிகள் தொடங்கப்பட்டன.
இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள தனி நபர் ஒருவர், மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து, இன்று (அக். 22) அந்தப் பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் வந்து ஆட்சியர் வாகனத்தின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.