தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரை தவறாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது - முதலமைச்சரை தவறாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தவறாக சித்தரித்து ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டிருந்த பாஜக இளைஞரணி நிர்வாகி எஸ்.ஏ.விக்னேஷை வாங்கல் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது
கைது

By

Published : Apr 12, 2022, 1:44 PM IST

கரூர்:கரூர் அடுத்த வாங்கல் நெரூர் பகுதியை சேர்ந்த பாஜக உறுப்பினர் விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர் ஆகியோரை தவறாக சித்தரித்து புகைப்படம் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து கரூர் மாவட்ட திமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி தீபக் சூரியன் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இன்று (ஏப்.12) காலை பாஜக இளைஞரணி நிர்வாகி எஸ்.ஏ.விக்னேஷ் என்பவரை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கரூர் நீதிமன்றம் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, விக்னேஷ் கரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை திருட்டு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details