கரூரில் அமைந்துள்ள சதாசிவ பிரமேந்திரர் ஆலயம் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்று. இதன் கூடுதல் சிறப்பு காவேரி நதி மிக அருகாமையில் பாய்ந்து வருகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கர்நாடக மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் சோமண்ணா நேற்று (பிப்.15) சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இந்தப் பகுதியில் வாழும் மக்கள் புண்ணியம் செய்தவர்கள். இங்குள்ள காவல் துறை உயர் அலுவலர் ஜெயராமன், எப்போது வந்தாலும் நான் இங்கு தரிசனத்திற்கு வரவேண்டும் எனக் கூறுவார். அதன்படி நான் இன்று (பிப்.15) வந்தேன். இந்தப் பகுதியும் கர்நாடகமும், காவிரியால் நன்மையடைந்து வருகிறது. காவிரி கரையில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு வருவதில் பெருமை கொள்கிறேன்.