கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்த சின்னமுத்தாம்பாளையம் அருகேயுள்ள நாலுகால் குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக க.பரமத்தி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆய்வாளர் ரமாதேவி தலைமையில் குழு அமைத்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துசென்றனர்.
மேலும் மோளபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் (62), காச்சினாம்பட்டி சக்திவேல் (35), கரூர் நரசிம்மபுரம் விமல்குமார் (26), ஆதிரெட்டிபாளையம் ஜெயசந்திரன் (17), சின்னமுத்தாம்பாளையம் சுமன் (37) மேல்நெடுங்கூரையைச் சேர்ந்த முருகன் (எ) முருகேசன் (30) ஆகியோர் சேவல் சண்டையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அப்போது முருகன் (எ) முருகேசன் என்பவரின் காலில், சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி பட்டதால் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.