தமிழ்நாட்டில் பல்வேறு அரசு பள்ளிகள் போதிய மாணவர்கள் இல்லாமல் மூடப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கும் நிலையில் மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்ற ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது, அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயம் வழங்குவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி அப்பள்ளில் ஆறு மாணவர்கள் சேர்ந்தனர்.
தற்போது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் அந்த ஆறு மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த மாணவர்களை மகிழ்விப்பதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல், ஆசிரியர்கள், பொதுமக்கள் இணைந்து ஒரு கிராம் தங்க நாணயத்தை தலா ஆறு மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டனர். இதையடுத்து, அப்பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா இன்று(ஜூலை 30) நடைபெற்றது.