கரூர் மாவட்டம், மாயனூர் கதவணை காவிரி ஆற்றின் அருகே 300 மீனவக் குடும்பங்கள் ஆற்றில் மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடைகளில் வாங்கும் மீன்களை விட, ஆற்றில் இருந்து நேரடியாக விற்கப்படும் மீன்கள் ருசி மிக்கவை என்பதால், ஆற்று மீன்களை வாங்க கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் அதிகமாக வருவது வழக்கம்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் கடந்த 60 நாட்களாக மீன் பிடிக்காமல் இருந்த மீனவ குடும்பங்கள் மீண்டும் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். அதிகமாக கெண்டை, ஜிலேபி, ராட்டு உள்ளிட்ட மீன்களைப் பிடித்து, ஆற்றின் கரையில் வைத்து விற்பனை செய்தனர்.
அப்போது ஆற்று மீன்களை வாங்க, மாயனூர் கதவணை அருகே அதிக அளவு அசைவப் பிரியர்கள் குவிந்தனர். மேலும் 60 நாட்களுக்குப் பிறகு மீன் பிடிப்பதால், மீன்களின் விலையை மீனவர்கள் ஏற்றி விற்பனை செய்தனர்.
ஊரடங்கில் விலையேறிய மீன்கள்: