கரூர்: நச்சலூர், இனங்கூர், நெய்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் பெய்த பருவமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. இதற்காக பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால், வேளாண் துறை சார்பில் பயிர் காப்பீட்டு இழப்பீடு கடந்த ஓராண்டாக வழங்காமல் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் மும்முனை மின்சாரம், பயிர் காப்பீட்டு இழப்பீடு உள்ளிட்டவற்றை காலதாமதமின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விசாரித்து 24 மணி நேரத்தில் பதில் அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.