கரூரை அடுத்த ஆண்டாங்கோயில் அஞ்சல், ரெட்டிப்பாளையம் பகுதியில் வசிப்பவர் கந்தசாமி (வயது 68). இவரது சித்தி நாச்சம்மாள், சித்தியின் மகள் பாப்பாயி மற்றும் அவரது மகன் நல்லச்சாமி ஆகியோர் கடந்த ஐந்து வருடங்களாக சின்ன ஆண்டாங்கோயில் முதல் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள லீபனோன் ஆஃப் கார்டு கிறிஸ்துவ சபைக்குச் சென்று வந்துள்ளனர்.
பின்னர் அந்த தேவாலயத்துக்குத் தேவையான பணிகள் செய்து வந்துள்ளனர். நாச்சம்மாளுக்கு வயதானதால், சுயநினைவு இல்லாமலும் அவரது மகள் லேசாக மனக் குறையுடன் காணப்பட்ட நிலையில், மகனுக்கும் கண் பார்வை குறைவாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அவர்கள் மூன்று பேரையும் காணவில்லை என்று கருதி, அவரது உறவினர் கந்தசாமி என்பவர் அந்த தேவாலயத்தில் சென்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் மூன்று பேரும் இறந்துவிட்டதாக பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு மற்றும் அவரது மகன் உதவி பாதிரியாரான சாம்மங்கள்ராஜ் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். ஆகையால், மனமுடைந்த கந்தசாமி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் கார்வேந்தன் தலைமையில் இன்று கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலரிடம் மனு ஒன்றினை கொடுத்தார்.
அதில், ' அந்த சர்ச்சில் ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, அதை வீடியோவாக்கி, மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.