தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் சுய உதவிக்குழு மோசடி: தலைமறைவான பெண்ணுக்கு வலைவீச்சு - பண மோசடி செய்த பெண்

மகளிர் சுய உதவிக்குழுவில் வசூல் செய்த பணத்துடன் தலைமறைவான பெண்ணை கண்டுபிடித்து இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பெண் மீது புகார்
பெண் மீது புகார்

By

Published : Apr 27, 2021, 6:50 AM IST

கரூர் காந்தி கிராமத்தில் வசித்துவரும் போதும் பொண்ணு, 105 பேர் கொண்ட சுய உதவிக் குழுவில் தலைவியாக உள்ளார். இவர் கரூர் நகரில் உள்ள விசாகம் கேபிடல் தனியார் நிதி நிறுவனத்தில், தான் நடத்தும் குழு உறுப்பினர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 15 ஆயிரம் வீதம் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

வாரம் ரூபாய் 900 இதற்கான வட்டியும், அசலும் என ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த அம்மு என்ற அன்னலட்சுமி மூலம் செலுத்திவந்துள்ளனர்.

இந்நிலையில் அம்மு என்ற அன்னலட்சுமி என்பவர் கடந்த 10 வாரங்களாகச் செலுத்தக்கூடிய தொகையை வசூல் செய்துவிட்டு, நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் கடன் கொடுத்த நபர்களைத் தொடர்புகொண்டு, கடனைச் செலுத்தச் சொல்லி கூறியுள்ளது. இதனால் நேற்று (ஏப்ரல் 26) கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணத்தை இழந்த 15-க்கும் பெண்கள் மனு அளித்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், "சுய உதவிக்குழு பெண்கள், தங்கள் குடும்பத் தேவைகளுக்காக கடன் பெற்று நிதி நிறுவனத்திற்கு முறையாகச் செலுத்திவருகிறோம்.

இதனை வசூல்செய்து வழங்கும் பணியை இடைத்தரகர் அம்மு என்கிற அன்னலட்சுமி, சுய உதவிக்குழு பெண்கள் செலுத்திய முதல் 10 தவணைகளை நிதி நிறுவனத்திற்கு முறையாகச் செலுத்திவிட்டு, மீதமுள்ள 10 தவணைகளை வசூல்செய்து தலைமறைவாகிவிட்டார்.

இதனால் இன்று (ஏப்ரல் 26) கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளோம். சாதாரணமான கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே காவல் துறையினர் தலைமறைவான பெண்மணியைக் கண்டுபிடித்து, நாங்கள் இழந்த கடன் தொகையை நிதி நிறுவனத்துக்குச் செலுத்த, மீட்டுத்தர வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details