தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையை கடக்க முயன்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர் காரில் மோதி உயிரிழப்பு! - சுக்காலியூர் விபத்து

கரூர்: தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள சுக்காலியூர் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

Accident
Accident

By

Published : Nov 9, 2020, 3:04 AM IST

சிவகங்கை மாவட்டம் நெடுங்குளம் ஆண்டிச்சியுரணி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (47). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் நேற்று தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பெங்களூரு செல்லும்போது கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள சுக்காலியூர் என்ற இடத்தில் உணவருந்திவிட்டு சாலையைக் கடக்க முயற்சித்தார். அப்போது, சதீஷ்குமார் (36) என்பவரது கார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜோசப் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஜோசப் உயிரிழந்தார்.

ராணுவ வீரர் காரில் மோதி உயிரிழப்பு
தற்போது, உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர் ஜோசபின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தாந்தோனிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details