கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சசிரேகா சக்திவேல் உள்ளிட்ட காவல்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இச்சோதனையில் கணக்கில் வராத 25,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - Bribe control bureau
கரூர்: தரகம்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்ட திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணக்கில் வராத ரூ. 25,500 பணத்தை கைப்பற்றினார்.
![சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4011487-thumbnail-3x2-raid.jpg)
raid
இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலர் கற்பகம் மற்றும் பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணைக்காக இன்று கரூர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிட்டனர்.