கரூர்: கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே கடந்த 8ஆம் தேதி, சுபாஷ்(16) என்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் கட்டளை பகுதியில் உள்ள காவிரியாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சுபாஷ் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தபோது, அவரது காலணிகள் மட்டும் இருந்துள்ளது.
இதுகுறித்து மாயனூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, காவிரி ஆற்றில் தேடுதல் பணியைத் தொடங்கினர். இரவு வரை தேடியும் உடல் கிடைக்கவில்லை.