சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கரூர் ரயில் நிலையத்தில் வருகின்ற 20ஆம் தேதி தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக கரூர் ரயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில், தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் 20ஆம் தேதிக்குப் பதிலாக 28ஆம் தேதி ஆய்வுசெய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் பேட்டரி கார் இயக்கத்தை ஜான்தாமஸ் தொடங்கிவைக்கவுள்ளார்.