சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு, கரூரில் தமிழ்நாடு அரசின் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் உணவு திருவிழா நடைபெற்றது. தனியார் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சபி தீபா, பள்ளியின் தாளாளர், முதன்மை அலுவலர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
’கலப்பட பொருட்களைத் தவிர்த்தாலே கலப்பட வியாபாரிகள் காணாமல் போய்விடுவார்கள்’ - கரூர் உலக உணவு தினம்
கரூர்: கலப்பட பொருட்களை வாங்குவதை தவிர்த்தாலே கலப்பட வியாபாரிகள் காணாமல் போய்விடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
![’கலப்பட பொருட்களைத் தவிர்த்தாலே கலப்பட வியாபாரிகள் காணாமல் போய்விடுவார்கள்’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4768983-thumbnail-3x2-krr.jpg)
Attending the Collector's Food Program, கரூர் உலக உணவு தினம்
சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் உடல் ஆரோக்கியத்தை பேணிகாக்கும் தானியங்களைக் கொண்டு தயாரித்த பாரம்பரிய உணவுகளைப் பார்வைக்கு வைத்தனர்.
Attending the Collector's Food Program, கரூர் உலக உணவு தினம்
இதனைத் தயாரித்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஆட்சியர், கலப்பட பொருட்களை வாங்குவதை தவிர்த்தாலே கலப்பட வியாபாரிகள் காணாமல் போய்விடுவார்கள் எனவும் இதனால் உடல், மனநல ஆரோக்கியமும் பெறமுடியும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவிரி ஆற்று உபரிநீர் கரூருக்கு கொண்டுவரப்படும் - பாரிவேந்தர்
Last Updated : Oct 16, 2019, 7:59 PM IST