தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 13, 2020, 6:38 PM IST

ETV Bharat / state

சிஏஏ பிரச்னை - தனியார் ஊழியர்களை ஊர் மக்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு!

கரூர்: சுகாதாரம் மற்றும் கழிப்பறை தகவல் சேகரிப்பதற்காக வீடுவீடாக கணக்கெடுப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aravakuruchi people say no caa
Aravakuruchi people say no caa

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 4 பேர் வீடு வீடாக சென்று குடும்பத் தலைவர், பெயர் மட்டும் சில தகவல்களை சேகரித்தனர் அவர்களிடம் அப்பகுதியிலுள்ள மக்கள் எதற்காக கணக்கெடுப்பில் ஈடுபடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, அவர்கள் மதுரையில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்திற்காக சுகாதாரம் மற்றும் கழிப்பறை தொடர்பாக தகவல் சேகரிக்கிறோம் எனக் கூறினர்.

இதற்கிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்காக அவர்கள் கணக்கெடுப்பு நடத்துவதாக தகவல் பரவியது. இதனால் கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்களை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் காவல் நிலையம் முன்பு அப்பகுதியில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் திரண்டனர்.

இது தொடர்பாக அரவக்குறிச்சி காவலர்கள் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பின் கூட்டம் கலைந்தது. மேலும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் உரிய ஆவணங்களை காவல் நிலையத்தில் காண்பித்து அனுமதி பெற்ற பிறகே பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். இதன்பிறகு அரவக்குறிச்சியில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக யாரும் வர அனுமதி இல்லை என தெருக்களில் துண்டுப்பிரசுரங்கள் (போஸ்டர்) ஒட்டப்பட்டுள்ளது.

சிஏஏ பிரச்னை - தனியார் ஊழியர்களை ஊர் மக்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details