கரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் அதிமுக உறுப்பினர்களைக் கொண்டே ஆலோசனைக் கூட்டத்தை நடத்திமுடித்துள்ளதாகப் புகார் கூறப்படுகிறது.
இது குறித்து ஆட்சியர் அன்பழகனிடம் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, அவர்களை (அதிமுகவினர்) தான் அழைக்கவில்லை என்றும் கூட்டம் நடத்தப்படுவதை அறிந்து அவர்களே வந்ததாகவும் ஆட்சியர் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஆட்சியர், தங்களுக்கு (திமுகவினர்) கூட்டம் குறித்த தகவல் கிடைக்கப்பெற்றால், கூட்டத்தில் தாங்களும் கலந்துகொள்ளுமாறும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.