தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 10, 2021, 3:10 PM IST

ETV Bharat / state

கஞ்சா விற்ற இளைஞர் கைது

கன்னியாகுமரி: கஞ்சா விற்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கஞ்சா விற்ற இளைஞர் கைது
கஞ்சா விற்ற இளைஞர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் கொடிகட்டி பறந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பத்ரி நாராயணன் பொறுப்பேற்ற பின்பு, தனிப்படை காவல் துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஏராளமானோரை கைது செய்தனர்.

மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், நாகர்கோவில் கோட்டார் அருகே சரக்கல்விளை பகுதியைச் சேர்ந்த உதேஷ்ராஜ் (23) என்ற இளைஞர் கஞ்சா விற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கஞ்சா விற்ற இளைஞரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details