தமிழ்நாடு

tamil nadu

மதில் சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி

கன்னியாகுமரி : தெங்கம்புதூர் அருகே மதில் சுவர் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Sep 27, 2020, 3:58 AM IST

Published : Sep 27, 2020, 3:58 AM IST

Youth dies when wall collapses!
Youth dies when wall collapses!

குமரி மாவட்டம், தெங்கம்புதூரை அடுத்துள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராமச்சந்திர பிரபு (வயது 31). இவர் நேற்று (செப்.26) மாலை தனது வீட்டைச் சுற்றியுள்ள மணணால் ஆன மதில் சுவர் அருகே நின்று, ஜல்லியை மண்வெட்டியால் அள்ளி கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென மண் சுவர் இடிந்து அவர் மேல் சரிந்து விழுந்துள்ளது. பின்னர் இடிபாடுகளில் சிக்கியிருந்த இளைஞரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

இதையும் படிங்க:கீச் கீச் சத்தம்தான் எங்களுக்கு அலாரம் - 6 வருடங்களாக கிளிகளுக்கு உணவளித்துவரும் தம்பதி...!

ABOUT THE AUTHOR

...view details