தமிழ்நாடு

tamil nadu

மினி பஸ் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: அதிர்ச்சி சிசிடிவி

By

Published : Jan 24, 2021, 9:57 PM IST

கன்னியாகுமரி: ஹோட்டலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மினி பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

accident
இளைஞர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுமித் பிபின் பாலன் (35). இவர் வெட்டுர்ணிமடம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது ஹோட்டலுக்கு தேவையான பொருள்களை வாங்க இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றார்.

பொருள்களை வாங்கிவிட்டு கடைக்கு திரும்பும்போது அவ்வழியாக வந்த மினி பஸ் எதிர்பாராதவிதமாக சுமித்தின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த சுமித், சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

சிசிடிவி

அங்கு மருத்துவர்கள் சுமித்தை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வடசேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததுடன், அப்பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சிசிடிவி: போலீசை பார்த்து தெறித்து ஓடிய திருடர்கள்... ரத்தம் சொட்டிய நிலையிலும் துரத்திப் பிடித்த காவலர்!

ABOUT THE AUTHOR

...view details