தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட குமரி வேட்பாளர்கள்: சுவாரஸ்ய நிகழ்வு! - vijay vasanth and pon rathakrishanan meet at nagercoil collector office

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இரு முன்னணி வேட்பாளர்களும், ஒருவருக்கொருவர் சந்தித்து வாழ்த்து பரிமாறிக் கொண்டனர்.

kk
கன்னியாகுமரி

By

Published : Mar 18, 2021, 7:09 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான சுரேஷ் ராஜன் நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அங்கு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் தற்போது போட்டியிடும் விஜய் வசந்த் வந்திருந்தார்.

அதே சமயத்தில் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக -அதிமுக கூட்டணி வேட்பாளர் எம்ஆர் காந்தியும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அவருடன், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் வருகை தந்திருந்தார்.

நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட குமரி மக்களவை தொகுதி வேட்பாளர்கள்

எதிரெதிர் அணிகளிலிருந்து மோதும் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் ஒரே இடத்தில் சந்தித்தபோது இருகரம் கூப்பியும் கைகளைக் குலுக்கியும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வு, தொண்டர்களிடையே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:அதிமுகவில் வாய்ப்பு மறுப்பு! தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ சுயேட்சையாக போட்டி!

ABOUT THE AUTHOR

...view details