நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கலங்குடி என்னும் இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாக கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். தேர்தல் அலுவலர் ஜான் கேப்ரியல் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் விதிமுறையின் படி வெளிநபர் அனைவரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் ஆனால், அதனை மீறி வசந்தகுமார் சென்றதால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.