கன்னியாகுமரி மாவட்டம் களியல் வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் சிலர் வனத்துறையினரால் தடைசெய்யப்பட்ட குளத்து பச்சை தவளையை வேட்டையாடி அதை சமைத்து உண்டதுடன், அதை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக் குமாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அலுவலர்களிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த விசாரணையில், டேஞ்சர் தமிழன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த டேனியலும் அவரது நண்பர் சுதீரும் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.