கன்னியாகுமரி: கீரிப்பாறை வனப்பகுதி அருகே தனியாருக்குச் சொந்தமான கிராம்பு எஸ்டேட்டில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இன்று (ஜூலை 12) இறந்து கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
மோதலின் காரணமாக உயிரிழப்பு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற வனத் துறையினர், யானையின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் வன கால்நடை மருத்துவப் பிரிவு மருத்துவர்கள் நடத்திய உடற்கூராய்வில், யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால்தான் யானை உயிரிழந்தது தெரியவந்தது.