தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோவாளை ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்! - தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

கன்னியாகுமரி: தோவாளை தாலுகாவுக்குட்பட்ட ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து தோவாளை ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

protest
protest

By

Published : Dec 14, 2020, 3:45 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவுக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகிறது. இந்த ஊராட்சி பகுதிகள் அனைத்தும் மலையடிவார பகுதிகளாகவும், அதிக காற்று வீசும் பகுதிகளாகவும் இருப்பதால் தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் தெரு விளக்குகள் பராமரிப்பு ஊராட்சி மன்ற தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

தற்போது அரசு அந்த பணியினை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால், பணிகள் முறையாக நடக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் ஊராட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து அதிகாரங்கள் ஊராட்சி மன்றங்களுக்கு வழங்க வலியுறுத்தி, தோவாளை ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில், தோவாளை தாலுகாவுக்குட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க:‘எதன் அடிப்படையில் மது விற்பனை செய்யப்படுகிறது’ - அரசு பதிலளிக்க மதுரைக்கிளை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details