சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், முக்கடல் சங்கமம், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகிய சிறப்புமிக்க அம்சங்களைக் காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று(அக்.11) ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் தற்போது கரோனா தடை உத்தரவு சுற்றுலாத்தலங்களில் நீடித்து வருவதால், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்குப் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.