கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள், மற்றும் கரோனா குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை (அக்.13) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வருகிறார். பயணிகள் விடுதியில் தங்கும் அவர், 14ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
அவரது வருகையை ஒட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரிநாத் தலைமையில் காவல் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.